Saturday, March 12, 2011

"சித்தர் காப்பு"

"முக்தி கொண்டமோட்சமது மவுன  தீட்சை முனையறிந்து  செல்லுதற்கு வாலை காப்பு ; வெத்தி  கொண்ட நந்தீசர் பாதங் காப்பு ; வேதாந்தம் மூவாயிரம்  திருமூலர் பாதங் காப்பு ; அட்டமா சித்திக்கும் அகத்தியன் பாதங் காப்பு ; அன்பே உருவாக்கும் அகப்பேய் பாதங் காப்பு ; பரம கயிலாய  குரு போகர் பாதங் காப்பு ; கொடுஞ்  சீற்றம் மாறிட கொங்கணவர் பாதங் காப்பு; சூழி முனை சூட்சும குரு சுந்தராணந்தர்  பாதங் காப்பு ; இகத்தில் கிரகம் வென்ற இடைக்காடர்  பாதங் காப்பு ; வரும் வாழ்நாள் சிறந்திட வால்மீகர்  பாதங் காப்பு ; மாயத்தை நீக்கிட மச்சமுனிவர்  பாதங் காப்பு ; முன் கர்மம் நீக்கி ஞானம் காட்டும் முனிகமலர்  பாதங் காப்பு ; காரியம் உணர்ந்து வெல்ல கருவூரார்  பாதங் காப்பு ; பாவங்கள் நீங்கிட யோகம் தந்த பதஞ்சலி  பாதங் காப்பு ; மனப்பாம்பை அடக்கிட பாம்பாட்டி  பாதங் காப்பு ; தன்னுடல் சிறக்க செடி தந்த தன்வந்திரி  பாதங் காப்பு ; காலம் அறிந்து வாழ ஞானம் தரும் காசிபர்  பாதங் காப்பு ; வெட்ட வெளியை உணர்த்திட்ட கடுவெளி சித்தர்  பாதங் காப்பு ; கொல்குணம் போக்கும் கோரக்கர்  பாதங் காப்பு ; பரத்தை அறிந்திட ஞானம் போதித்த புலஸ்தியர்  பாதங் காப்பு ; தேரா மருத்துவம் தெளிந்து உரைத்திட்ட தேரையர்  பாதங் காப்பு ; வான் உலகில் மனு வாழ சிவவாக்கியர்  பாதங் காப்பு ; போகத்தை துறந்திட புகழ் ஞானம் தந்த புண்ணாக்கீசர்   பாதங் காப்பு ; நல் ஞான ஜோதியை நலமாய் கூறிய நற்குதம்பை பாதங் காப்பு ; அறியாமை இருள் நீக்கிய அமலன் அழுகுண்ணி பாதங் காப்பு ; பூஜா , ஞானம் புகன்றிட்ட புலிப்பாணி பாதங் காப்பு ; காலம் கடந்து வாழ கலை கூறிய காகபுஜண்டர் பாதங் காப்பு ; கர்மம் நீக்கி காலனை வென்றிட காலங்கி பாதங் காப்பு ; காப்பான கருவூரார் , போக நாதர் கருணையுள்ள அகத்தீசர் , சட்டைநாதர் மூப்பான கொங்கணரும் பிரம்ம சித்தர் முக்கியமாய் மச்சமுனி , நந்திதேவர் கோப்பான கோரக்கர் , பதஞ்சலியார் கூர்மையுள்ள இடைக்காடர் சண்டிகேசர் வாப்பான வாதத்திற்கு ஆதியான வாசமுனி கமலமுனி காப்புதானே ". 

No comments:

Post a Comment